தமிழ் கவிதை - Tamil Kavithai Blog | TamilSMS
Collection of Kavithai, Tamil Kavithai Blog, Kavithai Quotes in Tamil, Kavithai for Whatsapp, Kavithai for Instagram, Kavithai SMS, Tamil SMS, தமிழ் கவிதை - Tamil Kavithai Blog | தமிழ் எஸ் எம் எஸ் Tamil SMS - Tamil Kavithai Blog

- Tamil Kavithai Blog Collection
- கவிதைகள் தொகுப்பு
- TamilSMS
- Tamil SMS Kavithai
- வாட்சப் கவிதை
நினைவில் கொண்ட ஆசைகளும்
கனவில் கண்ட பேராசைகளும்
உன்னை சேர்ந்திட தான்
பொருட்களை பயன்படுத்துங்கள் நேசிக்காதீர்கள்
மனிதனை நேசியுங்கள் பயன்படுத்தாதீர்கள்
உலகில் அதிகமாக வீணாக்கப்படுவது
யாராலும் புரிந்து கொள்ளப்படாத அன்பு
நீ என்னை விட்டு விலக நினைக்கும்
அந்த நொடிக்கு முன் நீ நினைத்து பார்க்க முடியாத
தூரத்திற்கு நான் சென்றிருப்பேன்
உனக்கானவை எதுவும் உன்னை விட்டுவிலகாது
அப்படி விலகினால் அது உனக்கானவை அல்ல
ஒருவரின் உண்மையான காதலை
புறக்கணிக்கும் ஒவ்வொருவரும்
அவர்கள் அறியாமல் தொலைக்கின்ற
ஒரு அழகான வாழ்க்கை
தனிமை நாமாக தேடி சென்றால் அது அருமை
தாமாக தேடி வந்தால் அது வெறுமை
ஒரு பெண்ணுக்கு நீ கொடுக்கும் மரியாதை
உன் தாயின் வளர்ப்புக்கு
தரப்படும் சான்று
மகிழ்ச்சியை விட
மறதி தான் தேவைப்படுகிறது
நிம்மதியாக வாழ்வதற்கு
மரணம் இல்லாமல் வாழ ஆசைதான்
மண்ணில் அல்ல உன் மனதில்
பொழுதுபோக்குக்காக உன்னிடம் பேசவில்லை
பொழுதெல்லாம் நீ வேண்டும்
என்பதால் தான் பேசுகிறேன்
விடுதலையில்லா சட்டம் வேண்டும்
உன் காதல் பிடிக்குள்
அகபட்டுக்கிடக்க
விதி வரைந்த பாதையில்
விடை வி தெரியாமல் போகிறது
என் வாழ்க்கை
சூழ்நிலைகள் மாறும்போது
சிலரது வார்த்தைகளும் மாறும்
வாழ்க்கையும் மாறும்
காலத்திற்கு பேசும் சக்தி கிடையாது
ஆனால் காலம் அனைத்திற்கும் பதில் சொல்லும்
தயங்கி நிற்பவர்கள்
ஒரு போதும் தங்களுக்கு
தகுதியான இடத்திற்கு
சென்று சேர்வதே இல்லை
நீண்ட பிரிவிற்குப் பின்
மீண்டும் பார்க்கும்போது
கோபம் இருக்காது
வருத்தமும் வலியுமே
மேலோங்கி இருக்கும்
நிலவின் பிரதிபலிப்பில்
குளிர் காய்கின்றன
இரவு நேர விண்மீன்கள்
தன்னை மிதித்தவரின்
கால்தடத்தை ஓவியமாக
மாற்றிவிடுகிறது மண்
நிலவுக்கு பணியாது
காத்திருந்த பனித்துளி
மடிந்து விட்டது காலை
சூரியனை பார்த்ததும்
உளறல்கள் கூட
கவிதையாகிறது
சில நேரங்களில்
கடல்மீது காதல் கொண்ட
அவன் கரை சேர
வழியில்லைதான்
மனதில் இருப்பதை
காட்டி கொடுப்பதால்
என் கண்ணும்
உன் அடிமையே
உறக்கம் இல்லா
விழிகளுக்கு இரவின்
ஆழம் அதிகம் தானே
குளிர்ந்த நிழல்
என்கிறாய் கொடும்
வெயிலை தாங்கிக்
கொண்டிருக்கிறது - மரம்
தப்புகளுக்கு தலை
முழுகினான் குப்பைகளை
சுமந்து வரும் புனித நதியில்